பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44


அரசன் வண்ணங்கி கூடம் முழுவதும் தேடிப் பார்த்தான். அங்கிருந்த மேசையிழுப்புகள் பெட்டிகள், அலமாரித் தட்டுகள் எல்லாம் திறந்து பார்த்தான். எதிலும் உடையைக் காணவில்லை. அவர்களை எழுப்பிக் கேட்கலாமா என்று எண்ணினான். பிறகு, சரி காலையிலேயே பார்த்துக் கொள்ளலாம், என்று தன் படுக்கை யறைக்குத் திரும்பிவந்தான்.

காலையில் அரசன் நீராடி முடிந்தபின், அந்த எத்தர்கள் மூவரும் அலங்கார மண்டபத்துக்கு அழைத்துவரப் பட்டனர். அவர்கள் கையில் ஒரு ஒலைப்பெட்டியிருந்தது. அதை மிகப்பத்திரமாகப் பத்தன் தூக்கிக் கொண்டு வந்தான்.

அரசனை அந்த எத்தர்கள் ஒரு நாற்காலியில் உட்காரவைத்தனர். அவன் அணிந்திருந்த ஆடைகளை யெல்லாம் கழற்றினர். தங்கள் கொண்டு வந்திருந்த ஒலைப்பெட்டியைத் திறந்தனர். அரசன் ஆவலோடு பெட்டிக்குள் எட்டிப் பார்த்தான். அதில் ஒன்றுமே இல்லை. ஆனால் அதில் ஒரு