பக்கம்:புது வெளிச்சம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவன் ஆரித்ருதர் எனும் கெளதமரிடம் சென்று பெருமை வாய்ந்த ஐயனே, தங்களிடம் பிரம்மச்சாரியாக வசிக்க விரும்பித் தங்களை வந்தடைந்தேன் என்றான், வணக்கமாகக் கைகூப்பி அவர் முன்னின்ரு

'சித்தம் அழகியோனே! நீ எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்?' என்று அவர் அவனைக் கேட்டார்.

‘ஐயனே! நான் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன் என்பதை அறியேன். என் அன்னையைக் கேட்டேன். அவள், "என் யெளவனத்தில் நான் பலரிடம் பலவிதமான வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது உன்னைப் பெற்றேன். நீ என்ன கோத்திரம் என்ற அதை நான் அறியவில்லை. என் பெயர்ஜாபாலா உன் பெயர் சத்தியகாமன், என்று பதில் கூறினாள். ஆகையால் நான் சத்தியகாம ஜாபாலன். இதுவே என்னைப் பற்றிய தகவல், என்றான்.

அவர் அவனைப் பார்த்து கூறினார். உண்மையை இங்ங்னம் கூறுபவனைப் பிராமணன் அல்ல என்று சொல்வது தகுதியல்ல. 'சித்தம் அழகியோனே'! சமித்தைக் கொண்டுவா. உனக்கு உபநயனம் செய்விக்கிறேன். நீ சத்தியத்தை விட்டு விலகவில்லை;' என்று கூறி அவனுக்குச் செய்ய வேண்டியது செய்து கூறவேண்டியது கூறி வைத்துக் கொண்டார். கதையை நான் இங்கு இத்துடன் நிறுத்தி உன்னைச் சிந்திக்கப் பண்ணுகிறேன். அவன் உத்தமமான பிராமணன்: என்பது புரிகிறதல்லவா? சத்தியத்தை உபாசிக்கிறவன் தெய்வத்தை அறிந்தடைந்தவனாகிறான். என்னதான் வேசம் போட்டுக்கொண்டிருந்தாலும் ஒருமனிதன் சத்தியத்தை விட்டு விட்டால் அவன் ஆத்திகன் எனும் அருகதை அற்றவன். அவனே நாத்திகன். நாத்திகம் பரவும் நாடு நலம் காணாது என்பது சரியான பழமொழியாகவே இருக்குமல்லவா?

சர்க்கரை என்ற சொல்லே சர்க்கரையாகி விடாது. அந்தச் சொல் சுட்டிக்காட்டி உள்ள பொருள் வேறு. அது கரும்பைப் பிளிந்து சாறாகக் காய்ச்சித் தயாரித்துள்ள ஒரு இனிமைப் பண்டம். இதேபோல் கடவுள் என்ற சொல்லே ஒரு பொருளாகிவிடாது. அச் சொல்குறிக்கும் பொருள் மனிதனின் உள்ளத்தில் உண்மை என்னும் பண்புக்குரியது; மற்ற உருவத்திற்குரியதன்று.

24 ᗛ

கவிஞர் வெள்ளியங்காட்டான்