பக்கம்:மகான் குரு நானக்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. சிறு வயதிலேயே ஞானம்

ந்திய மாநிலங்களிலே ஒன்று பஞ்சாப் மாநிலம், ஐந்து நதிகளான ஜீலம், ஜீனாப், ராவி, பியாஸ், சட்லெஜ் என்ற நதிகள் பாய்ந்து அந்த மாநிலத்தை வளமுள்ள பகுதியாக மாற்றியதால் அதற்கு பஞ்சாப் என்ற பெயர் வந்தது.

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு பஞ்சாப் ஒரே மாநிலமாக இருந்தது. வெள்ளைக்காரர்கள் அந்த மாநிலத்தை நம்மிடம் விட்டுச் செல்வதற்கு முன்பு அதை மேற்குப் பஞ்சாப்பென்றும், கிழக்கு பஞ்சாப்பென்றும் இரண்டாகப் பிரித்து நிர்வாகம் செய்து வந்தார்கள்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு, மேற்குப் பஞ்சாப் மாநிலம் பாகிஸ்தான்் நாட்டுடன் சேர்க்கப்பட்டு விட்டது. கிழக்குப் பஞ்சாப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. தற்போது பாகிஸ்தான் நாட்டிலுள்ள மேற்குப் பஞ்சாப் மாநிலத்தில் தாள்வாண்டி என்றொரு சிற்றுர் உள்ளது.

தாள்வாண்டி என்ற அந்தக் கிராமத்தில், மேதாகலூராய் என்பவரும், மட்டாதிரிபாத் என்ற அவரது மனைவியாரும் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் ஒரு நடுத்தர குடும்பமாகவும், அக்கிராமத்தில் செல்வாக்குடனும் இருந்தார்கள். அந்த தம்பதியர் களுக்கு, 1469 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், கார்த்திகை முழு நிலாவான பெளர்ணமி நாளன்று குருநானக் பிறந்தார். அக்குழந்தைக்குப் பெற்றோர் நானக் என்று பெயரிட்டார்கள்.