பக்கம்:மகான் குரு நானக்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

23


நாட்கள் நகர்ந்தன மதியம் நேரம் கடும் வெயில்! மாடுகள் புல் மேய்ந்து கொண்டிருந்தன. நானக் தன்னை மறந்தார். தரையில் படுத்தவர் படுத்தபடியே மெய் மறந்து கிடந்தார். என்ன நடக்கிறது என்று அவருக்கே தெரியாத ஒரு தியான மயக்க நிலை அவருக்கு.

சூரிய வெப்பம் நானக் முகத்தைத் தீய்த்துக் கொண்டிருந்தது. அவ்வளவு கடுமையான வெயில் வெப்பம் அவரது முகத்தில் விழுந்து கொண்டிருந்ததும் அவருக்கு ஏதோ ஒரு மெய் மறந்த நிலை.

அந்த நேரத்தில் அவர் படுத்துக் கிடந்த தரையருகே இருந்த அடர்ந்த புதர் ஒன்றிலே இருந்து ஒரு நல்ல பாம்பு சீறியபடியே வெளிவந்தது. நானக் என்ன விழித்துக் கொண்டா இருக்கிறார் பயந்து எழுந்து பாம்பு பாம்பு என்று ஓடிட அந்த பாம்பு நானக் முகத்தை நோக்கிச் சென்றது. தன்னுடைய படத்தை விரித்தது. நானக் முகத்திற்கு மேலே படத்தை அகலமாக விரித்துக் கொண்டும், ஒரடி உயரத்துக்கு மேலே தன்னுடைய உடலைத் தூக்கிக் கொண்டும் அருள்ஞான பிஞ்சுவுக்குக் குடைபோல பிடித்துக் கொண்டே நின்றது

அப்போது அந்த வழியே ஊர்த் தலைவர் எங்கோ போய் விட்டுத் திரும்பி வந்து கொண்டிருக்கும்போது, இந்தக் காட்சியைப் பார்த்துத் திகைத்து அப்படியே நின்று விட்டார்.

ராய்புலார் என்ற பெயருடைய அந்த ஊர்த் தலைவர் சிறந்த பக்திமான் அப்போதுதான்் அவரது நீண்டநாள் சந்தேகம் உண்மை என்று நிரூபணமாகிவிட்டதை அவர் அறிந்தார்.

உடனே, ஊர்த் தலைவர் ஊருக்குள் சென்று தான் கண்ட உண்மையை ஊராருக்குத் தெரிவித்தார். நேராக மேதாகலூராய் வீட்டிற்கு ஓடிப்போய்தான் கண்டதைக் கூறி நானக் மனிதரல்லர்! அவர் ஓர் அருளாளர் என்று கூறி அவரும் நம்பினார் ஊராகும் நம்பினார்கள்!