பக்கம்:மகான் குரு நானக்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



4. ஏழையின் சிரிப்பில் இறைவன்

சுல்தான்பூர் கவர்னரின் தானியக் களஞ்சியப் பாதுகாப்பாளர் பணியை உதறித் தள்ளிவிட்டு, கண்ணிர் சிந்தும் பீபி நானகியிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டு, நானக் தனது இல்லறத்தைத் துறந்து வந்து விட்டார்.

ஒர் ஒடையருகே வந்து அமர்ந்தார். அங்கே தவத்திலே ஒரு யோகியாக இறைவன் பற்றோடு இருந்தார். கடவுள் ஒருவரைத் தவிர அவர் மனம் எதன் மீதும் பற்றேதும் இல்லாமல், கடுமையான யோகத்திலே அமர்ந்து விட்டார்.

கடும் வெயில், கடும் குளிர், அச்சம், காற்றின் வேகம், எல்லாம் அவரைத் துன்புறுத்தியும்கூட அதையெல்லாம் அவர் பொருட்படுத்தவில்லை. தன்னுணர்வற்ற தனிமனிதனாக உட்கார்ந் திருந்தார். அழகே உருவான மனைவி உருவம் அவரை மருட்டியது: தான் பெற்ற செல்வங்களது காட்சிகள் பந்த பாசநேசத்தோடு மின்னி நினைவுறுத்தின. அவர் வகித்த பதவி, தமக்கையின் பாசம், மைத்துனரின் இரக்கம், தாய் தந்தையரின் எண்ணங்கள் அனைத்தும் அவரைச் சூழ்ந்து சூழ்ந்து, தோன்றித் தோன்றி அவரது தவத்தைக் குலைக்க முயன்றன. எல்லாவற்றையும் அவர் துச்சமாக மதித்து, அமர்ந்த இடத்திலேயே ஒரு சிறு கல் குன்றுபோல ஆடாமல் அசையாமல் இருந்தார். எந்த பந்த பாச சக்தியாலும், சிற்றின்பச் சிந்தனைகளாலும் அவருடைய தவத்தைக் குறைக்க முடியவில்லை. இவ்வாறு அவர் மூன்று பகல்களும், மூன்று இரவுகளும் தொடர்ச்சியாக அமர்ந்திருந்தார்.