பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

மனத்தின் தோற்றம்


குறச்சிங்கன் குறச்சிங்கியைக் கேட்கின்றான்:

“இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல்
எங்கே நடந்தாய் நீ சிங்கி
எங்கே நடந்தாய் நீ சிங்கி”

சிங்கி சொல்லுகின்றாள்:

“கொத்தார் குழலார்க்கு வித்தாரமாகக்
குறிசொல்லப் போனேனடா சிங்கா
குறிசொல்லப் போனேனடா சிங்கா”

சிங்கன். அப்படியா! அது இருக்கட்டும். உன்

“காலுக்கு மேலே பெரிய விரியன்
கடித்துக் கிடப்பானேன் சிங்கி
கடித்துக் கிடப்பானேன் சிங்கி”

சிங்கி; இது விரியன் பாம்பல்ல

“சேலத்து காட்டிற் குறிசொல்லிப் பெற்ற
சிலம்பு கிடக்குதடா சிங்கா
சிலம்பு கிடக்குதடா சிங்கா”

பிறகு சிங்கன் சிங்கியின் இடுப்பைக் காட்டி

“மெல்லிய பூங்தொடை வாழைக்குருத்தை
விரித்து மடித்ததார் சிங்கி
விரித்து மடித்ததார் சிங்கி”

இங்கி; இது வாழைக் குருத்தல்ல—

“நெல்வேலியார் தந்த சல்லாச் சேலை
நெறிபிடித் துடுத்தினேன் சிங்கா
நெறிபிடித் துடுத்தினேன் சிங்கா”

சிங்கன்:- ஒகோ சேலையா? இவ்வளவு பேசுவதற்கு நீ எங்கே கற்றுக் கொண்டாயடி?