பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

127



கூறிய நூல்களின் பாடல்களில் கூறப்பட்டுள்ள திரண்ட கருத்தாகும்.

இந்தப் பிரபுலிங்க லீலைப் பாடல் பகுதிக்கு வேறொரு விதமாகவும் பொருள் கூறலாம். அதாவது:-

தாழ்மையாக - அமைதியாக அடக்கமாக - பணிவாக வாழ்பவர்கள் மிகவும் உயர்ந்தவர்களாக மதிக்கப் பெறு வார்கள்; இங்கனம் இன்றி, தங்களைத் தாங்களே பெருமைப்படுத்திக் கொண்டு ஆரவாரமாகச் செருக்குடன் வாழ்பவர்கள் மிகவும் தாழ்ந்தவர்களாகக் கணிக்கப்படுவர். என்பதுதான் மற்றொரு பொருள்:

இந்தக் கருத்தை, எந்த அறம் சூழ்ந்தோர் உரைத்த நூல்கள் கூறுகின்றன? திருவள்ளுவர் திருக்குறளாகிய அறநூலில் கூறியுள்ளார்:

பெருந்தன்மை உடையவர்கள் என்றைக்கும் பணிவாக ஒழுகுவார்கள் அதாவது, பணிவாக நடப்பவர்களே பெருந் தன்மை உடையவர்களாக மதிக்கப் பெறுவர். மாறாக, கீழ்மையாளர்கள் தங்களை மேலாகப் பாராட்டி ஆரவாரப் படுத்திக்கொள்வர் - அதாவது, தங்களைத் தாங்களே பாராட்டிக் கொண்டு ஆரவாரத்துடன் வாழ்பவர்கள் கீழோராகக் கணிக்கப்படுவர்-

மற்றும், தங்களைத் தாங்களே பெருமிதப் படுத்திக் கொள்ளாதவர்கள் பெருமை உடையவர்கள் எனவும், தங்களைத் தாங்களே பெருமிதப்படுத்திக் கொண்டு திரிபவர்கள் சிறுமை உடையவர்கள் என்றும் மக்களால் எண்ணப்படுவர். குறள்கள்.

“பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து” (978)
“பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்த்து விடல்” (979)