பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

137



கற்புடைமையில் சிறந்தவளாக - கற்புடைய பெண்கட்கு 岂_Qfü}凸0丛凸T凸 ஒதப்படுபவளாக உள்ளவள் அருந்ததி என்பதை, கற்றவர் - கல்லாதவர் அனைவரும் ஒப்புக் கொள்வர். இந்த அருந்ததியும் முல்லை வளர்த்தவளாம். முனிவர்களின் மனைவிமார்களைக் குறிப்பிடத் தொடங்கிய சிவப்பிரகாசர், வசிட்ட முனிவரின் மனைவி எனப்படும் அருந்ததியை முதலில் குறிப்பிட்டுள்ளார். பாடல்:

“முல்லையங் தொடை அருந்ததி முதல் எழு முனிவர்
இல்லறம்புரி துணைவியராம் எழுவர்” (2:27)

என்பது பாடல் பகுதி. சங்க இலக்கியங்களிலிருந்து தம் கால இலக்கியங்கள் வரை கற்றுத் தேர்ந்துள்ள சிவப்பிரகாச அடிகளார், அந்த மரபை ஒட்டி இவ்வாறு கூறியிருப்பது ஒரு சிறப்புறு கருத்தாகும்.

இந்தக் காலத்தில் எங்கெங்கோ சில வீடுகளில் முல்லை வளர்க்கின்றனர். முல்லைமலர் மாலை சூடிக் கொள்வதும் வழக்கத்தில் உள்ளது. முல்லையரும்பு - முல்லையரும்பு என்று கூவித் தெருக்களிலும் விற்கப்படுகிறது.

3.3. மரபு நிலையும் சூழ்நிலையும்

ஒருவருக்குப் பிறந்த குடிவழி - குடும்பவழி வரும் குணநலச் செயல் மரபுநிலை (Heredity) எனப்படும். ஒருவர் சேர்ந்து பழகுகின்ற சூழல் வழி வரும் குண நலச் செயல்கள் சூழ்நிலை (Environment) எனப்படும்.

நல்ல மரபு நிலையில் பிறந்தவர்கள் நல்லவராக இருப்பதும் உண்டு அல்லது தீய சூழ்நிலையால் கெட்டு விடுவது முண்டு. திய மரபு நிலையில் பிறந்தவர்கள் தீயவராக இருப்பது முண்டு அல்லது நல்ல சூழ்நிலையால் நல்லவராக மாறுவதும் உண்டு.

சூழ்நிலை என்ற ஒன்றைத் தவிர மரபுநிலை எனப் பண்டு இருந்ததில்லை. காட்டுமிறாண்டிகளாக