பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

143



ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள என்பதற்கு, ஆக்கம் அன்ன நீரார்க்கே உளவாதல் வேண்டும் என்பது கருத்து. திருவை அறக்கயிற்றால் கட்டுதலும் இன்னதே.

4.3 காராடும் வெள்ளாடும்

காம வேதனை கொண்ட மகளிர் திங்களை நோவதாகக் கூறுவது இலக்கிய மரபு. இங்கே, அல்ல.மப் பிரபுமேல் காதல் கொண்ட மாயை என்பவள் திங்களை நொந்து புலம்புதலில் சிவப்பிரகாசர் ஒரு புதுமையைக் கையாண்டுள்ளார். அதாவது, அவள் கூறுகிறாள்: திங்களே! உடலுக்குள் செல்லுமாறு நஞ்சை உண்டவனாகிய சிவன், நின்னை அவ்வாறு செய்யாமல், உடலின் உட்பகுதியோடு தொடர்பு இல்லாத முடிமேல் நின்னை வைத்திருப்பது, நீ நஞ்சினும் கொடிய பொருள் என்பதால்தான். உன்னை அமுத கலை என்று சொல்வது, மக்கள் காராட்டை வெள்ளாடு என்று சொல்வது போலாம்.

“அங்கமதில் நஞ்சிருத்தினோன் அங்கமல்லா
அவிர்சடை மேல்
தங்ககினை வைத்திட்டது கின்கொடுமை
கருதித் தானன்றோ
பொங்கும் அமுதகலை என்ன கின்னைப்
புகறல் வெண்திங்காள்
இங்கு மனிதர் காராட்டை வெள்ளா
டென்பது ஒக்குமால்” (5.59)

செம்மறியாட்டின் உடலை நோக்க, காராட்டின் உடல் தெளிவாக - தூய்மையாக இருப்பதால், காராட்டை வெள்ளாடு என்றனர் போலும். இந்தியர், ஐரோப்பிய வெள்ளையர் போல் இல்லாவிடினும், ஆப்பிரிக்க அட்டைக் கறுப்பர்களை நோக்க ஒரளவு வெள்ளையராவர். காராட்டை வெள்ளாடு என்பதும் இன்னதே!