பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

173



“ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ
பேடிய ரன்றோ பெற்றியின் நின்றிடின் (24,25)

எனவே,

“மணிப்பூங் கொம்பர் மணிமே கலைதான்
தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள்” (42,43)

என்று கூறினாள். அந்தக் காலத்திலும் (எந்தக் காலத்திலும்) பெண்கள் காவலுடன் இயங்க வேண்டியவர்களாக இருந் தனர் என்பது இதனால் பெறப்படும். இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கால் பங்குக் காலத்தில், மகளிர் ஆடவர் துணையுடன் செல்லினும், ஆடவரை வீழ்த்தி மகளிரைக் கொள்ளை கொள்பவர் கூட்டம் மிக்கிருக்கிறது என்பதை எண்ணுங்கால் வேதனையாய் உள்ளம் வருந்துகிறது.

மண்ணாமை

சமணத் துறவிகள் குளித்துக் கழுவி உடலைத் தூய்மை செய்வதில்லையாம். இதனை,

“மண்ணா மேனியன் வருவோன் தன்னை” (3.91)

என்னும் பகுதியால் அறியலாம். மண்ணுதல் = குளித்தல் - தூய்மை செய்தல். துணியைத் தூய்மை செய்யும் வண்ணான் என்னும் பெயர்ப் பொருளில் மலையாளத்தில் ‘மண்ணான்’ என்னும் பெயர் வழங்கப்படுகிறது. இதனை நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த ‘திருஞான சம்பந்தர் திருவந்தாதி’ என்னும் நூலில் உள்ள

“கண்டினம் சூழ்ந்தவளை பிரம்போர் கழுவா உடலம்
விண்டினஞ் சூழக் கழுவின வாக்கிய வித்தகனே” (6)
“குழுவாய் எதிர்ந்த உறிக்கைப் பறிதலைக் குண்டர்தங்கள்
கழுவா உடலம் கழுவின வாக்கிய கற்பகமே” (28)