பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

மனத்தின் தோற்றம்



‘மூக்கே முரலாய்-’ (4)
‘வாயே வாழ்த்து கண்டாய்-’ (5)
‘நெஞ்சே கினையாய்–’ (6)
‘கைகாள் கூப்பித் தொழிர்-’ (7)
‘ஆக்கையால் பயனென்-’ (8)
‘கால்களால் பயனென். (9)

அறிவுப் பொறிகள் (ஞானேந்திரியங்கள்), செயல் பொறிகள் (கன்மேந்திரியம்), உள்ளுறுப்பு (அந்தக்கரணம்) ஆகியவற்றுள் ஒன்பது உறுப்புகளின் கடமையைத் திருநாவுக்கரசர் தேவாரப் பாடலில் கூறியுள்ளார்.

இளங்கோ அடிகள் செவி, கண், நாக்கு என்னும் மூன்றின் கடமைகளை மட்டும் கூறியுள்ளாரெனில், இது அவராகக் (ஆசிரியர் கூற்றாகக்) கூறவில்லை. கதை மாந்தராகிய ஆய்ச்சியரின் சூழ்நிலைக்கு ஏற்ப, ஆய்ச்சியர் கூறியிருப்பதாக அளந்து கூறியுள்ளார். நாவுக்கரசர் தம் சொந்த உறுப்புகட்குக் கூறுவதால், கஞ்சத்தனம் இன்றி . தாராளமாகப் பல உறுப்புகட்கும் கட்டளை பிறப்பித்து உள்ளார்.

ஆய்ச்சியர் குரவைப் பகுதியைப் பாடிப் பாடிச் சுவைத்து இன்புறல் வேண்டும்.

2. குன்றக்குரவை

பிறுகுடியிரே சிறுகுடியிரே?

தம் குன்றுப் பகுதியில் வேங்கை மரத்தின் கீழ் நின்று பின்பு வானுலகம் சென்ற கண்ணகியைக் கண்ட குன்றவர், இவள் போன்ற தெய்வம் நமக்கு வேறு இல்லையாதலின் இவளைப் பாடுவோம் என்று பாடிய பகுதி சுவையான தாதலின், விளக்கம் வேண்டாது அதனைக் காண்பாம்: