பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

மனத்தின் தோற்றம்



பண்ணிய இராம காதை பங்குனி
அத்த நாளில்
கண்ணிய அரங்கர் முன்னே கவியரங்
கேற்றி னானே”

என்னும் ஊர் பேர் தெரியாத (அநாமதேயப்) பாடலுக்கு, சில கம்பராமாயண ஒலைச் சுவடிகளின் ஈற்றில் காணப் படுகிற பின் வரும் பாடல் பதில் இறுக்கும். அப்பாடல்:

“ஆவின் கொடைச்சகரர் ஆயிரத்து நூறொழித்துத்
தேவன் திருவெழுந்துார் நன்னாட்டு-மூவலூர்ச்
சீரார் குணாதித்தன் சேய் அமையப் பாடினான்
காரார் கா குத்தன் கதை”

என்பதாகும். (சகரர் ஆயிரத்து நூறொழித்து = பன்னிரண்டாம் நூற்றாண்டு; குண ஆதித்தன் சேய் = கம்பர்; காகுத்தன் = இராமன்). இப்பாடல், கம்பர் பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்னும் கருத்துடையது.


மற்றொரு சான்று: சோழநாட்டைவிட்டு வெளியேறிய கம்பர், இறுதியாகப் பாண்டிய நாடடைந்து இயற்கை எய்தியதற்குமுன், (தொண்டை நாடு எனப்படும் பல்லவ நாடு சோழர் கைக்கு மாறியதால் அங்கே தங்காமல்) ஆந்திர அரசனாகிய ஓரங்கல் நாட்டுப் பிரதாப ருத்திரனிடம் சென்று சிறிது காலம் தங்கியிருந்ததாக ஒரு வரலாறு கூறுகிறது. இந்தப் பிரதாப ருத்திரனும், ஒட்டக் கூத்தரால் உலா பாடப்பெற்ற சோழ மன்னர்களும் பன்னிரண்டாம் நூற்றாண்டினர் எனச் சில கல்வெட்டுகள் கூறுகின்றன. பிரதாப ருத்திரனோடு தொடர்பு கொண்ட கம்பரும் இக்காலத்தவரே.

எனவே, கம்பர் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்பது விளங்கலாம்.

★ ★ ★