பக்கம்:முருகன் அந்தாதி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

தாங்குவ துன்னருள் ஒன்றே
எனும் உண்மை தான் அறிந்தேன்
ஈங்கினி யாரும் எனக்கருள்
வாரிலே யாவர்மேன்
ஏங்கும் படிவருங் காலே
உனையன்றி ஏன்றுகொள்வார்
தூங்கும் இருலவிச் மாமரு
தாசலத் தொல்பொருளே. (22)

பொருளேது கின்னருள் அன்றிநின்
பூந்தாள் புகழலன்றித்
தெருளேது கின்துணே யன்றித்
துணையேது சிந்தையினில்
இருளேது மின்றி நினதுரு
வத்தை இருத்துதற்காம்
அருளே வழங்குவை மாமரு
தாசலத் தற்புதனே. (23)

அற்புதம் அற்புதம் நின்னெழில்,
என்றன் றமரினிடைப்
பொற்புறச் சூரனே போற்றிடு
வானேற் பொருந்துகின்றன்


22, தூங்கும் இருல் அவிர் - தொங்கும் தேனடைகள் விளங்குகின்ற.

23. தெருள்-தெளிவு.