இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15
கதுவும் திருமேனி கொண்டிங்கு
- நாயேங்கள் காணும்படி
மதுவொன்று சோலே மருதக்குன்
- றத்தில் வயங்கினேயே. (34)
வயங்கொள்ள லாகா மனத்தினில்
- நின்னுரு வைக்குமந்த
நயங்கொள்ள லின்றி மயங்கினேன்
- நீரின் நலவுருவை
இயங்கும் படியென் உளத்தே
- இருத்த இசைகுவையோ
மயங்கு மவர்காண மாட்டா
- மருத மலேயரசே, (35)
அரசே எனத்தேவர் போற்றிய
- வேந்தனும் அன்று குலேந்
துரமேது மின்றி தினதடி
- தாழ்ந்தான் உறுமவற்காய்
வரமேவுசூரன் குலமறுத்
- தாய் என் மயலறுக்கும்
தரமேது சொல்வாய் மருதாச
- லாஎன்றன் தாரகமே. (86)
34. கதுவும்-மேற்கொள்ளும். மது-தேன். வயங்கினே-விளங்கினாய்
35. வயங்கொள்ளலாகா-வசப்படுத்த முடியாத, நயம். நன்மை.
36. வேந்தன்-இந்திரன். உரம்-வலிமை. வரம்-தவத்தால் பெற்ற வரங்கள். தரம் தகுதி. தாரகம்-ஆதாரமான பொருள்.