இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18
பாடிப் பரிந்து வழிபடப்
- பெற்றிலாப் பாவிஉனக்
கூடிச் சகிக்க மருதா -
- சலவழி கூறுவையே. (41)
கூறு படாத முழுவின்பம்
- தந்து குளிரவைத்து
மாறு படாதருள் என்தெய்வ
- மேசுடர் மாமணியே
வேறு படாதுன் அடியாரைப்
- போற்றி விரைமலர்கள்
நாறு படாம்போற் படர்மரு
- தாசலம் கண்ணுவனே. (42)
கண்ணிய நின்னடி யாரைப்
- பணிந்து நயந்துபத்தி
பண்ணிய தால்வரும் புண்ணியத்
- தால்தொக்க பாவமெலாம்
அண்ணிய சூரியன் முன்பனி
- என்ன அகன்றிடுமே
திண்ணிய கெஞ்சர் தொழுமரு
- தாசலத் தெய்வதமே. (43)
41.சானம்-தியானம் பரிந்து-இரங்கி.
42. நாறு படாம் போல்- மணம் வீசும் போர்வையைப் போல.
42.காது படம் போல்-மணம் வீசும் போர்வையைப் போல