பக்கம்:முருகன் அந்தாதி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28


ஆதரங் கொள்மகள் பாலே
நிகழ்த்தினே ஆய்தமிழின்
மீதுறு மன்பினன் றோமரு
தாசல வேலவனே.
(66)

வேலெனும் ஞான வியன்சத்தி
யால்வெவ்வ விச்சையெனும்
சிலமில் லாவவு ணக்குலம்
போக்கினே தேவர்கரி
ஏலுங் கிரியை குறமகள்
இச்சையென் றேயிலகும்
கோலங்கொண் டாய்மரு தாசலத் .
தேகின்ற கொற்றவனே.
(67)

கொற்றவன் நீ அடி யேன்உன்
குடிமகன் கூரருளால்
பெற்றவன் நீ அடியேன் உன்
மகன்குரு பீடுறும் நீ
உற்றமா ணாக்கன் அடியேன்கண்
கண்ட ஒருதெய்வம்நீ
மற்றடி யேன் பத்தன் மாமரு
தாசல வானவனே.
(68)

வானவர் தம்பத மேயெனி
னும்பெற வாஞ்சையிலேன்


67. அவிச்சை-அஞ்ஞானம். தேவர்கரி-தேவயானை.