இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆதியே எவரும் அளவிடாப் பொருளே !
அணுவினும் அகப்புறம் நிறைந்த
சோதியே ! தெளிந்த சுருதி தந்தவனே !
துதிக்கெலாம் மதிக்கெலாம் துணையே !
தீதையே அகற்றும் இறைவனே ! உனது
திருமுகம்மது நபிபொருட் டால்
பேதையேன் துணிந்த கருத்தை நீ முடிக்கும்
பெருவரம் புரிந்தருள் வாயே !
— வரகவி வண்ணக்களஞ்சியப்புலவர்.