பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

41

பார்ப்பணீயம் பறந்து போக விரட்டியடிப்போம் வாரீர்!

‘ஏழைக் குடி மக்களே, ஒன்று படுங்கள்!’ என்றெல்லாம் தலைப்புகளிட்டு உணர்வைக் கிளறும் வகையில் வெறுப்பூட்டும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன

அந்த இதழ்களில் வெளியான புரட்சிக் கவிதைகளில் அவளுடைய நாயகனின் பெயர்தான் இருக்கிறது.

குடிப் பெருமை, குலப் பெருமை என்று எந்த மேன்மையையும் மைத்ரேயி அனுபவித்திருக்கவில்லை. எனினும், தான் பிறந்து வளர்ந்த சமுதாயத்தின் பெண்களைக் கற்பிழந்தவர் களென்றும் ஆண்களைக் காமுகர்களென்றும் திருப்பித் திருப்பிக் கூறுவதை அவளால் எற்க இயலவில்லை.

தன்னை இனிமையான சொற்களால் உபசரித்து, இதெல்லாம் படி என்று எதற்காகச் சொல்லிவிட்டுப் போகிறாள்? உன் குலத்தினர் மற்றவரைச் சுரண்டிக் கொண்டு தரையில் வைத்து நசுக்கிக் கொண்டு ஏகபோகமாக உல்லாச வாழ்வில் ஊறிக் கொம்மாளமிடும் அநியாயம் இனி நடக்காது என்று தெரிந்து கொள் என்று சொல்வதாகக் கொள்ளலாமா?

அந்த நேரத்தில் மைத்ரேயிக்குத் தன் மணவாளனைக் கூட்டிக்கொண்டு எப்படியேனும் இந்த இடத்தை விட்டு ஒடிவிடவேண்டும் என்று தோன்றுகிறது. “நீங்கள் இம்மாதிரி எல்லாம் எண்ணுவது சரியல்ல, கெட்டவர்களும் நல்லவர்களும் எல்லாச்சாதிகளிலும் இருக்கிறார்கள்” என்று அவனுக்கு உண்மையை அறிவுறுத்தத் துடிக்கிறாள். அதற்கு விளக்கம் கொடுக்க, ஆதாரபூர்வமான அறிவு அவளுக்கு இல்லை. எனினும், அவளுடைய உணர்வுக்கு அவர்கள் மிகையாக எழுதியிருப்பதாகவே தோன்றுகிறது.

எத்தனை நேரம் அந்த காகிதங்கள் விரித்துப் போட்டுக் கொண்டு புழுங்கிக் கொண்டிருந்தாளோ?

அந்தம்மை உள்ளே வருகிறாள், அவளுடைய கையில் ஒரு புதிய பட்டுச் சேலையும் இணைந்த வண்ணத்தில் வெல்வெட் சோளியும் இருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/43&oldid=1099660" இலிருந்து மீள்விக்கப்பட்டது