பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வருங்கால மானிட சமுதாயம்


எதிர்காலம் எத்தகையதாக இருக்கும்?


நிகழ்காலமும் எதிர்காலமும்


மாந்தர்கள் சிந்திக்கப் பிறந்தவர்கள்; அவர்களால் சிந்திக்காமல் இருக்க முடியாது. அவர்கள் எப்போதும் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கின்றனர். சிலர் எதிர்காலம் நிகழ்காலத்தைக் காட்டிலும் நன்றாக இருக்கும் என்று நம்புகின்றனர் வேறு சிலரோ நிகழ்காலத்தை மட்டுமே விரும்புகின்றனர். ஏனேனில் அவர்களுக்கு எதிர்காலத்தில் எந்த நன்மையும் இருக்கப் போவதில்லை. மக்கள் எதிர்காலத்தைக் கூர்ந்து நோக்குகின்றனர். சிலர் நம்பிக்கையோடும் சிலர் நிராசையோடும் நோக்குகின்றனர். இருப்பினும் எதிர்காலத்தை எவரும் புறக்கணித்து விட முடியாது. எனெனில் எதிர்காலம் என்பது நாளை நிலவ இருக்கும் நிகழ் காலத்தின், இன்றைய நிகழ்காலத்தின் இடத்தில் இடம் பெறப்போகும் காலத்தின் பகுதியாகும்.

எதிர்காலம் ஒவ்வொருவரோடும் தனிப்பட்ட முறையிலும் ஒட்டு மொத்தமாகவும் தொடர்பு கொண்டதாகும் எதிர்காலம் என்று பார்க்கும்போது எல்லாமே ஒரே மாதிரியான அக்கறையைத் தோற்றுவிப்பதில்லை என்பது உண்மை. கலைகள்.