இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வைணவமும் தமிழும்
25
(ஆ) திருவள்ளுவமாலை: இதில்இரண்டு பாடல்கள் உள்ளன.
- மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்
- ஞாலம் முழுதும் நயந்தளந்தான் வாலறிவின்
- வள்ளுவரும் தன்குறள்வெண் பாவடியால் வையத்தார்
- உள்ளுவவெல் லாம்.அளந்தார் ஒர்ந்து (6)
இது பரணர் பாடியது, இதில் திரிவிக்கிரமாவதாரக் குறிப்பு உள்ளது. திருமால் தன் இரண்டு அடிகளால் புறஉலகத்தை விரும்பி அளந்தார். வள்ளுவர் அவ்வுலகோரின் அக உலகையெல்லாம் ஆராய்ந்து அளந்தார்.
- உப்பக்கம் நோக்கி உபகேசி தோள்மணந்தான்
- உத்திர மாமதுரைக் கச்சென்ப-இப்பக்கம்
- மாதாது பங்கி மறுவில் புலச் செந்நாப்
- போதார் புனற்கூடற் கச்சு (21)
இப்பாடலை நல்கூர் வேள்வியார் பாடியது உபதேசிநப்பின்னை என்றும், அவள் தோள்மணந்தான் கண்ணபிரான் என்றும், உத்தர மாமதுரை அவன் அவதரித்த வடமதுரை என்றும் மாதாநுபங்கி செருக்கொழில் உடையான் என்றும் பொருள் உரைப்பர்.
(இ) நாலடியார் : சமண முனிவர்கள் நானூறு பேர்களால் இயற்றப்பெற்ற நீதியைக் கூறும் இந்நூலில் வைணவ சமயக் கருத்துக்களைக் காண்டல் அரிது. ஆழ்வார் பாசுரத்தை யொட்டி வரும் ஒரு பாடலில் மட்டிலும் இக்கருத்தை ஈண்டுக் காட்டுவது பொருத்தமாகும்.