பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ.இதிகாக பாகவதம்


பன்னிய வரைமுதற் பலஅ ரண்களில்
துன்னுவெம் சமத்திடைத் தோன்ற லுற்றுமுன்
மன்னுவெம் கனகனை மாய்த்த மைந்துடை
நன்னலம் சேர்தர மடங்கல் காக்கவே.

பின்னர் இந்திரன், விருத்திரன் முதலியோரை அழித்தல், அந்த பிரமகத்தியைப் போக்கியது, சித்திரகேது, மருத்துகள் ஆகிய வரலாறுகள் தொடர்கின்றன.

ஏழாம் கந்தம்: 4அத்தியாயங்கள் கொண்டது.இது. சிசுபாலன் வீடுபேறு, இரணிய வதம், இரணிய வதத்தின் பின்னர் பிரகலாதன் துதி 10 பாடல்கள் அமைகின்றன. அவற்றுள்,

விழைவற வெறிந்தார் நாடும்
விழுப்பெருஞ் சுடரே, தூய
பழமறைக் கொழுந்தே, பச்சைப்
பசும்புயல் வண்ணா, நின்னை
வழிபடு மன்பே யன்றி
வரமெவன் பெறுவ தென்னாத்
தொழுதனன் வழுத்த லுற்றான்,
தூயபே ரறிஞ னம்மா.
பூவுறை மணம்போ லெல்லாப்
பொருளிது முறைவாய், நின்பொன்
சேவடி தொழுது போற்றார்
தேவரே யேனும் நீசர்
ஆவர்;பொல் லாத நீச
ராயினும் வணங்கி நின்சீர்
நாவினால் வழுத்தில் தேவ
நாயகர் நாத ராவார்.

என்பவை இரண்டு பாடல்கள். தொடர்ந்து வருணாசிரமம், இல்லற இயல்பு இயம்பப் பெறுகின்றன.


25