பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்


:'நங்காய்மண் அருந்தினன்நின் மதலை' என

'இல்லை'என நவின்றா னாக
கொங்கார்ந்த செழுங்கமலக் கோற்றொடிகை
பற்றினள்,வாய் காட்டு கென்ன,
அங்காந்த மணிவண்ணன் அம்பவளத்
துவர்வாயி னழகு காணும்
செங்காந்தள் முகிழ்விரலந் தீங்கிளவி
உலகனைத்தும் தெரியக் கண்டாள்
விண்கண்டாள் விண்வளைக்கும் வெங்கதிருந்
தண்கடரும் விளங்கக் கண்டாள்;
மண்கண்டாள், மண்வளைந்த மாகடலும்
மேருயர்மால் வரையும் கண்டாள்;
தண்கொண்ட வெண்கோட்டுத் தவளநெடு
வளங்கண்டாள், தளையும் கண்டாள்;
பண்கொண்ட வண்டரற்றும் பழந்துளவோன்
இவன்எனவே பரவி னாளால்,
முருகொழுகு முகிழ்விரியும் மொய்துளவோன்
மாயையினான் மறைத்த லோடும்
பருகுவனள் போனோக்கிப் பழுத்தொழுகும்
அன்பினளாய்ப் பராவி அன்னை
பொருகளிறு வருக,வளர் போரேறு
வருக,எழிற் பூவை வண்ண!
வருகவெனத் துகரில்விளை மணிமுத்தங்
கொண்டனள்,உண் மகிழ்வு பூத்தாள்

அற்புதமான பாடல்கள். பாலகிருட்டிணனின் காட்சி உள்ளத்தைத் தொடுகின்றது.[1]


  1. 4 குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி'யிலுள்ளதேவகி புலம்பல் (7)என்பதிலுள்ள பாசுரங்களை ஒப்புநோக்கி மகிழ்தல் தகும்.
28