பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 இமாசலப் பிரதேசம் பகுதி உயர்ந்தது; மற்றப் பகுதிகள் பெரும்பாலும் முன் மும் காலத்தில் உயர்ந்தன. இமயமலை பல படிகளில் தெற்கு நோக்கி வளர்ந்தது. முதலில் தோன்றிய மலேத் தொடரின் அடிவாரத்தில் ஒரு மறுதலேயான பிளவுப் பள்ளம் தோன்றியது. மலேத்தொடர் இதை நோக்கித் தள்ளப்படவே, அங்கு மடிப்புக்கள் தோன்றிப் புது மலைத்தொடர்கள் தோன்றின. இது பலமுறை நிகழ்ந்து தற்போதுள்ள தொடர்கள் தோன்றின. இவ்விடத்தில் புவியின் மேற்புறணி இன்னும் நிலப்படவில்லை என்ப தற்கு இங்குத் தோன்றும் புவியதிர்ச்சிகளே சான்ருகும். இமயமலையின் தட்பவெப்ப நிலையில் இடத்தை யொட்டிப் பெரிய வேறுபாடுகள் உள்ளன. மேற்குப் பகுதிகளை விடக் கிழக்கே வெப்பமும் மழையும் அதி கம். இங்குத் தட்பவெப்ப நில அதிகமாக மாறுவதில்லை. தென்பகுதிக்கும் வடபகுதிக்கும் இன்னும் அதிகமான தட்பவெப்ப வேறுபாடுகள் உள்ளன. மேற்குப் பகுதி யில் மழை குறைவாக இருப்பதோடு அன்ருட வெப்ப கிலே வேறுபாடு மிக அதிகமாக இருக்கும். தெற்குப் பகுதியிலுள்ள மலைகள் அதிகமாக அரிபட்டும், மேற் குப் பகுதி உருண்ட நிலத்தோற்றங் கொண்டும் காணப் படுவது இப்பகுதிகளின் தட்பவெப்ப வேறுபாடுகளே அறிவுறுத்துகின்றது. கிழக்கில் வெண்பனிக்கோடு 14,000 அடி உயரத்திலும், மேற்கே 19,000 அடி உயரத்திலும் உள்ளது. வறட்சியான திபெத்துப் பகுதியில் இது இன்னும் 3,000 அடி உயரத்திலுள்ளது. தட்பவெப்ப நிலைக்கேற்ப இமயமலையின் தாவரங் களும் இடத்திற்கு இடம் மாறுபடும். இதில் உப அயன மண்டலக் காடுகள், பருவ மழைக்காடுகள், இலேயுதிரா மரக்காடுகள், குளிர்காட்டு ஊசியிலேக் காடுகள் போன்ற பலவகைத் தாவர வகைகள் காணப்படுகின் றன. மேற்குப் பகுதியில் மத்தியதரைக் கடல் தாவர வகைகளும், உயர்ந்த பகுதிகளில் ஆல்ப்ஸ் மலைத் தாவர வகைகளும், மேற்கே ஆப்பிரிக்கக் காட்டுவகைத் தாவ ரங்களும் உள்ளன. பயன்படும் மரவகைகளில் சாலம், வெள் வாகை, தேவதாரு ஆகியவை முக்கியமானவை. 7.000 அடி உயரம் வரை தேயிலை பயிராகிறது. திபெத் துப் பகுதியில் பெரும்பான்மையான தாவரங்கள் இரண் டடி உயரத்திற்கும் குறைவான புதர்களாக இருக்கும். இந்தியப் பகுதியில் வெப்பநாட்டுக் காட்டு விலங்கு கள் உள்ளன. திபெத்தில் காணப்படுபவை குளிர்ப் பிரதேசங்களில் வாழும் விலங்கினங்கள். மிகப் பல பறவை வகைகளும் இமயமலையில் உள்ளன. 8,000 அடி உயரம் வரை நாகப்பாம்பு காணப்படுகிறது. பல்லி களும் தவளேகளும் 18,000 அடி உயரத்திலும் உள் ளன. அதிகமான உயரத்திலுள்ள எல்லா விலங்குக ளும் தடித்த ரோமப் போர்வையை உடையவை.இவை கடுங்குளிரில் ஒடுங்கிக் கிடந்து அக்குளிர்கால ஒடுக் கத்தால் தம்மைக் காத்துக்கொள்ளுகின்றன. இமாசலப் பிரதேசம் இந்திய யூனியனின் சீ பிரிவு இராச்சியங்களுள் ஒன்று. பிரிட்டிஷ் ஆளுகை யின்போது 21 சுதேச சமஸ்தானங்களாக இருந்த வற்றை ஒன்ருக இணைத்து இந்த இராச்சியம் அமைக் கப்பட்டது. இதன் பரப்பு: 10,600 ச. மைல்; மக் : 9.89,437 (1951). இதன் தலைநகர் சிம்லா. இது மாஹசு, சிர்மூர், மண்டி, சம்பா என்ற நான்கு மாவட் டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் அரசாங்கத் தலைவரான பிரதம கமிஷனருக்கு உதவியாக 9 பேர் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்று நிறுவப்பட்டுள் ளது. இக்குழுவினருள் அறுவர் மக்களின் பிரதிநிதிகள் மற்ற மூவரும் முன்பிருந்த சமஸ்தான அரசர்களின்


இயக்கங்காட்டி பிரதிநிதிகள். இந்த இராச்சியத்திற்கு 36 உறுப்பினர் கொண்ட சட்டசபையும் உண்டு. காச் மீாம் "ட டியா லா ... . o, المست مونفيه O (*- ட் സ് ള്ള __ இமாசலப் பிரதேசம் இந்த இராச்சியத்தில் உருளைக்கிழங்கும் பல பழ வகைகளும் பயிராகின்றன. இங்குள்ள காடுகளும் முக்கியமானவை. இயக்கங்காட்டி (Stroboscope); இ ய ங் கு ம் பொருள்களே அசையாத தோற்றமுள்ளவைபோலக் காட்டும்கருவி இயக்கங்காட்டி எனப்படும். பிளேட்டோ (Plateau) என்னும் பெல்ஜிய பெளதிக அறிஞர் இதை முதன் முதலில் அமைத்தார். விளிம்பைச் சுற்றிலும் தொளைகள் கொண்ட ஒரு சக்கரத்தைச் சுழற்றி, அத் தொளேகளின் வழியே பொருளேப் பார்க்குமாறு ஒரு கருவி அமைத்தால், அதுவே எளிதாக உண்டாக்கிய 。摩 ?” Ꮓ. [। இயக்கங்காட்டி உதவி சென் கோ. சிக் க. கே. . ஒர் இயக்கங்காட்டியாகும். கண்ணுக்கு நேராக இரு தொளே வரும்போது மட்டுமே பொருளானது புலப் படும். நமது கண்ணில்ை ஒரு பொருளைப் பார்க்கும் போது அது மறைந்த சிறிது நேரம்வரை அது உள்ளது போலவே தோன்றுகிறது. ஆகையால் அது பல முறை வெகுவிரைவாக நம் கண்முன் தோன்றி மறைந்தாலும்