பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/30: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
பக்கத்தின் நிலைமை | பக்கத்தின் நிலைமை | ||
- | + | சரிபார்க்கப்பட்டவை |
13:26, 24 சூன் 2021 இல் கடைசித் திருத்தம்
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
23. விசிறி
ஓங்கி உயர்ந்த பனைமரமாம் ;
உச்சியில் ஒலைக் குருத்தழகாம்;
பாங்காய் அதனைக் கொய்திடுவார்;
பக்குவ மாக வகிர்ந்திடுவார்.
அழகாய் விசிறி கட்டிடுவார் ;
அலங்கா ரங்கள் செய்திடுவார் ;
ஒழுங்காய்க் கடையில் வைத்திடுவார்;
ஒவ்வொன் றாக விற்றிடுவார்.
மிக்க வெய்யிற் காலத்தில்
வியர்வை ஒழுகும் தேகத்தில்.
மக்கள் விசிறி வாங்குவரே.
மகிழ்வாய் இரவில் தூங்குவரே.
24