திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/107.இரவச்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 160: | வரிசை 160: | ||
;உரை விளக்கம்: முயற்சியான் கடப்பதனை, இரவான் கடக்கலுற்றான் அதன் கரை காணாமையின், 'ஏமாப்பில் தோணி' என்றார். ஏமாப்பின்மை தோணிமேல் ஏற்றப்பட்டது. அது கடத்தற்கு ஏற்ற தன்மையானும், நிலம் அறியாது செலுத்தியவழி உடைதலானும், அதன்கண் ஏறற்க என்பதாம்; இஃது அவயவ உருவகம். |
;உரை விளக்கம்: முயற்சியான் கடப்பதனை, இரவான் கடக்கலுற்றான் அதன் கரை காணாமையின், 'ஏமாப்பில் தோணி' என்றார். ஏமாப்பின்மை தோணிமேல் ஏற்றப்பட்டது. அது கடத்தற்கு ஏற்ற தன்மையானும், நிலம் அறியாது செலுத்தியவழி உடைதலானும், அதன்கண் ஏறற்க என்பதாம்; இஃது அவயவ உருவகம். |
||
===குறள் 1069(இரவுள்ள ) === |
===குறள் 1069(இரவுள்ள ) === |
||
வரிசை 169: | வரிசை 171: | ||
<FONT COLOR=" #808000 "><big> தொடரமைப்பு: இரவு உள்ள உள்ளம் உருகும், கரவு உள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும். </big> </FONT> |
<FONT COLOR=" #808000 "><big><B> தொடரமைப்பு: இரவு உள்ள உள்ளம் உருகும், கரவு உள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும்.</B> </big> </FONT> |
||
;இதன் பொருள்: இரவு உள்ள உள்ளம் உருகும்= உடையார் முன் இல்லார் சென்று இரந்து நிற்றலின் கொடுமையை நினைந்தால் எம் உள்ளம் கரைந்து உருகாநிற்கும்; |
|||
;இதன் பொருள்: |
|||
:கரவு உள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும்= இனி, அந்நிலையைக் கண்டுவைத்தவர் இல்லையென்றலின் கொடுமையை நினைந்தால், அவ்வுருகும் அளவுதானும் இன்றிப் பொன்றி விடும். |
|||
;உரை விளக்கம்: "இரவினை உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ, கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு"<sup>1</sup> என்றார் பிறரும். இரவினும் கரவு கொடிது என்பதாம். இதற்குப் பிறர் எல்லாம்<sup>2</sup> இரக்கின்றவர் உள்ளம் உருகும் என்று உரைத்தார். |
|||
;உரை விளக்கம்: |
|||
:<small>1. நாலடியார், 305.</small> |
|||
:<small>2. மணக்குடவர்.</small> |
|||
===குறள் 1070 (கரப்பவர்க்கி ) === |
===குறள் 1070 (கரப்பவர்க்கி ) === |
06:20, 7 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
திருக்குறள் பொருட்பால்- ஒழிபியல்
பரிமேலழகர் உரை
அதிகாரம் 107. இரவச்சம்
- அதிகார முன்னுரை
- அஃதாவது, மானந் தீர வரும் இரவிற்கு அஞ்சுதல். அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும்.
குறள் 1061 (கரவாது )
கரவா துவந்தீயுங் கண்ணன்னார் கண்ணு () கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும்
மிரவாமை கோடி யுறும். (01) இரவாமை கோடி உறும்.
தொடரமைப்பு: கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும் இரவாமை, கோடி உறும்.
- இதன் பொருள்
- கரவாது உவந்து ஈயும் கண் அன்னார்கண்ணும் இரவாமை= தனக்குள்ளது கரவாது இவர் வரப்பெற்றோம் என்று உண்மகிழ்ந்து கொடுக்கும் கண் போலச் சிறந்தார் மாட்டும் இரவாதே ஒருவன் வறுமை கூர்தல்: கோடி உறும்= இரந்து செல்வம் எய்தலின் கோடிமடங்கு நன்று.
- உரை விளக்கம்
- நல்குரவு மறைக்கப்படாத நட்டார்மாட்டும் ஆகாது என்பதுபட நின்றமையின், உம்மை உயர்வுசிறப்பின்கண் வந்தது. அவ்விரவான் மானம் தீராது என்னும் துணையல்லது, அதற்கு மிகுதி கூடாமையின், வல்லதோர் முயற்சியான் உயிர் ஓம்பலே நல்லது என்பது கருத்து.
குறள் 1062(இரந்துமுயிர் )
இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து () இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக வுலகியற்றி யான். (02) கெடுக உலகு இயற்றியான்.
தொடரமைப்பு: உலகு இயற்றியான் இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின், பரந்து கெடுக.
- இதன் பொருள்
- உலகு இயற்றியான், இரந்தும் உயி்ர் வாழ்தல் வேண்டின்= இவ்வுலகத்தைப் படைத்தவன் இதன்கண் வாழ்வார்க்கு முயன்று உயிர்வாழ்தலை அன்றி இரந்தும் உயிர்வாழ்தலை வேண்டி விதித்தானாயின்; பரந்து கெடுக= அக்கொடியோன் தானும் அவரைப்போன்று எங்கும் அலமந்து கெடுவானாக.
- உரை விளக்கம்
- மக்கள் உயிர்க்கெல்லாம் வாழ்நாளும், அதற்கு வேண்டுவதாய உண்டியும், அதற்கு ஏதுவாய செய்தொழிலும், பழவினை வயத்தாற் கருவொடு கலந்த அன்றே அவன் கற்பிக்கும் அன்றே? அவற்றுள் சில உயிர்க்கு இரத்தலையும், ஒரு செய்தொழிலாகக் கற்பித்தான் ஆயின், அத்தீவினையால் தானும் அத்துன்பமுறல் வேண்டும் என்பதாம்.
- இவை இரண்டு பாட்டானும் அவ்விரவின் கொடுமை கூறப்பட்டது.
குறள் 1063 (இன்மையிடும் )
இன்மை யிடும்பை யிரந்துதீர் வாமென்னும் () இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும்
வன்மையின் வன்பாட்ட தில். (03) வன்மையின் வன்பாட்டது இல்.
தொடரமைப்பு: இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின், வன்பாட்டது இல்.
- இதன் பொருள்
- இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின்= வறுமையான் வரும் துன்பத்தை முயன்று நீக்கக் கடவேம் என்று கருதாது இரந்து நீக்கக் கடவேம் என்று கருதும் வன்மை போல;
- வன்பாட்டது இல்= வலிமைப்பாடுடையது பிறிது இல்லை.
- உரை விளக்கம்
- நெறியாய முயற்சி நிற்க, நெறியல்லாத இரவால் தீர்க்கக் கருதுதலின், வன்மையாயிற்று. வன்பாடு- முருட்டுத்தன்மை. அஃதாவது, ஓராது செய்து நிற்றல்.
- இதனான் வறுமை தீர்தற்கு நெறி இரவன்று என்று கூறப்பட்டது.
குறள் 1064 (இடமெல்லாங் )
இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே யிடமில்லாக் () இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம் இல்லாக்
காலு மிரவொல்லாச் சால்பு. (04) காலும் இரவு ஒல்லாச் சால்பு.
தொடரமைப்பு: இடம் இல்லாக்காலும் இரவு ஒல்லாச் சால்பு, இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே.
- இதன் பொருள்
- இடம் இல்லாக் காலும் இரவு ஒல்லாச் சால்பு= நுகரவேண்டுவன இன்றி நல்கூர்ந்த வழியும், பிறர்பால் சென்று இரத்தலை உடம்படாத அமைதி;
- இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே= எல்லா உலகும் ஒருங்கு இயைந்தாலும், கொள்ளாத பெருமை உடைத்து.
- உரை விளக்கம்
- அவ்விரத்தலைச் சால்பு விலக்குமாகலின், இரவு ஒல்லாமை அதன்மேல் ஏற்றப்பட்டது.
- இதனான் அந்நெறியல்லதனைச் சால்புடையார் செய்யார் என்பது கூறப்பட்டது.
குறள் 1065 (தெண்ணீரடு )
தெண்ணீர் அடுபுற்கை யாயினுந் தாடந்த () தெள் நீர் அடு புற்கை ஆயினும் தாள் தந்தது
துண்ணலி னூங்கினிய தில். (05) உண்ணலின் ஊங்கு இனியது இல்.
தொடரமைப்பு: தாள் தந்தது தெண்ணீர் அடு புற்கை ஆயினும், உண்ணலின் ஊங்கு இனியது இல்.
- இதன் பொருள்
- தாள் தந்தது தெண்ணீர் அடுபுற்கை ஆயினும்= நெறியாய முயற்சி கொடுவந்து தந்தது தெளிந்த நீர்போலும் அடுபுற்கையே ஆயினும்;
- உண்ணலும் ஊங்கு இனியது இல்= அதனை உண்டற்குமேல் இனியது இல்லை.
- உரை விளக்கம்
- தாள் தந்த கூழ் செறிவின்றித் தண்ணீர் போன்றதாயினும், இழிவாய இரவான் வந்தது அன்றித் தம் உடைமையாகலின், அமிழதத்தோடு ஒக்கும் என்பதாம்.
- இதனால் நெறியினான் ஆயது சிறிதேனும் அது செய்யும் இன்பம் பெரிது என்பது கூறப்பட்டது.
குறள் 1066(ஆவிற்கு )
ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற் () ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு
கிரவி னிளிவந்த தில். (06) இரவின் இளி வந்தது இல்.
தொடரமைப்பு: ஆவிற்கு நீர் என்று இரப்பினும், இரவின் நாவற்கு இளி வந்தது இல்.
- இதன் பொருள்
- ஆவிற்கு நீர் என்று இரப்பினும்= தண்ணீர் பெறாது இறக்கும் நிலைமைத்தாயதோர் ஆவினைக் கண்டு அறன் நோக்கி இதற்குத் தண்ணீர் தரல்வேண்டும் என்று இரந்து சொல்லுங்காலும்;
- இரவின் நாவிற்கு இளி வந்தது இல்= அவ்விரவு போல ஒருவன் நாவிற்கு இளிவந்தது பிறிது இல்லை.
- உரை விளக்கம்
- ஆ காத்தோம்பல் பேரறம் ஆகலின், 'ஆவிற்கு' என்றும், பொருள் கொடுத்துக் கொள்ளவேண்டாத எண்மைத்து ஆகலின், 'நீர்' என்றும், இரக்கின்றானுக்கு இளிவு அச்சொல்லளவே ஆகலின், 'நாவிற்கு' என்றும், அதுதான் எல்லா இளிவினும் மேற்படுதலின், 'இளிவந்தது இல்' என்றும் கூறினார்.
- இதனான் அறனும் முயன்று செய்வது அல்லது, இரந்து செய்யற்க என்பது கூறப்பட்டது.
குறள் 1067 (இரப்பன் )
இரப்ப னிரப்பாரை யெல்லா மிரப்பிற் () இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பா ரிரவன்மி னென்று. (07) கரப்பாரை இரவன்மின் என்று.
தொடரமைப்பு: இரப்பாரை எல்லாம் இரப்பன், இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று.
- இதன் பொருள்
- இரப்பாரை எல்லாம் இரப்பன்= இரப்பாரை எல்லாம் யான் இரவாநின்றேன்;
- இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று= யாது சொல்லி எனின், நுமக்கு இரக்கவேண்டுமாயின் தமக்கு உள்ளது கரப்பாரை இரவாது ஒழிமின் என்று சொல்லி.
- உரை விளக்கம்
- இரண்டாவது விகாரத்தான் தொக்கது. இவ்விளிவந்த செயலான் ஊட்டியவழியும், உடம்பு நில்லாதாகலின், இது வேண்டா என்பது தோன்ற, 'இரப்பன்' என்றார்.
- இதனான் மானந்தீர வரும் இரவு விலக்கப்பட்டது.
குறள் 1068 (இரவென்னு )
இரவென்னு மேமாப்பி றோணி கரவென்னும் () இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி கரவு என்னும்
பார்தாக்கப் பக்கு விடும். (08) பார் தாக்கப் பக்கு விடும்.
தொடரமைப்பு: இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி, கரவு என்னும் பார் தாக்கப் பக்கு விடும்.
- இதன் பொருள்
- இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி= இவ்வறுமை என்னும் கடலை இதனான் கடத்தும் என்று கருதி, ஒருவன் ஏறிய இரவு என்னும் சேமம் அற்ற தோணி;
- கரவு என்னும் பார்தாக்கப் பக்கு விடும்= அதன்கண் ஓடுங்கால், கரத்தல் என்னும் வன்னிலத்தோடு தாக்குமாயின், பிளந்துபோம்.
- உரை விளக்கம்
- முயற்சியான் கடப்பதனை, இரவான் கடக்கலுற்றான் அதன் கரை காணாமையின், 'ஏமாப்பில் தோணி' என்றார். ஏமாப்பின்மை தோணிமேல் ஏற்றப்பட்டது. அது கடத்தற்கு ஏற்ற தன்மையானும், நிலம் அறியாது செலுத்தியவழி உடைதலானும், அதன்கண் ஏறற்க என்பதாம்; இஃது அவயவ உருவகம்.
குறள் 1069(இரவுள்ள )
இரவுள்ள வுள்ள முருகுங் கரவுள்ள () இரவு உள்ள உள்ளம் உருகும் கரவு உள்ள
வுள்ளதூஉ மின்றிக் கெடும். (09) உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
தொடரமைப்பு: இரவு உள்ள உள்ளம் உருகும், கரவு உள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
- இதன் பொருள்
- இரவு உள்ள உள்ளம் உருகும்= உடையார் முன் இல்லார் சென்று இரந்து நிற்றலின் கொடுமையை நினைந்தால் எம் உள்ளம் கரைந்து உருகாநிற்கும்;
- கரவு உள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும்= இனி, அந்நிலையைக் கண்டுவைத்தவர் இல்லையென்றலின் கொடுமையை நினைந்தால், அவ்வுருகும் அளவுதானும் இன்றிப் பொன்றி விடும்.
- உரை விளக்கம்
- "இரவினை உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ, கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு"1 என்றார் பிறரும். இரவினும் கரவு கொடிது என்பதாம். இதற்குப் பிறர் எல்லாம்2 இரக்கின்றவர் உள்ளம் உருகும் என்று உரைத்தார்.
- 1. நாலடியார், 305.
- 2. மணக்குடவர்.
குறள் 1070 (கரப்பவர்க்கி )
கரப்பவர்க் கியங்கொளிக்குங் கொல்லோ விரப்பவர் () கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒ முயிர். (10) சொல் ஆடப் போஒம் உயிர்.
தொடரமைப்பு: சொல்லாட இரப்பவர் உயிர் போஒம், கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல்.
- இதன் பொருள்
- உரை விளக்கம்