இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
101
- சித்தாடை கட்டிக் கிட்டு
- சிங்காரம் பண்ணிக்கிட்டு
- மத்தாப்பூ சுந்தரி ஒருத்தி
- மயிலாக வந்தாளாம்!
- அத்தானைப் பார்த்து-அசந்து
- போயி நின்னாளாம்! (சித்தாடை)
- முத்தாத அரும்பெடுத்து
- முழ நீள சரம் தொடுத்து
- வித்தார கள்ளி கழுத்தில்
- முத்தாரம் போட்டானாம்!
- எத்தாகப் பேசி
- இளமனசைத் தொட்டானாம்! (முத்தாத)
- குண்டூசி போல ரெண்டு
- கண்ணும் உள்ளவளாம்-முகம்
- கோணாமல் ஆசை அன்பா
- பேசும் நல்லவளாம்!
- அந்தக் கண்டாங்கி சேலைக்காரி கை காரியாம்!
- அந்தக் கள்ளி அத்தானைக் கல்யாணம்
- பண்ணிக் கொண்டாளாம்! (சித்தாடை)
- அஞ்சாத சிங்கம் போல
- வீரம் உள்ளவனாம்!-யானை
- வந்தாலும் பந்தாடி ஜெயிக்க வல்லவனாம்!