பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

109


ஆண் : தேவியின் திருமுகம்
தரிசனம் தந்தது!
பெண் : தேவனின் அறிமுகம்
உறவினைத் தந்தது!
ஆண் : பூவுடல் நடுங்குது குளிரில்-நான்
போர்வையாக லாமா?
பெண் : தேவை ஏற்படும் நாளில்!-அந்த
சேவை செய்யலாம்!
ஆண் : மனமோ கனி!
குணமோ தனி!
பெண் : மனமும் குணமும்!-கோபம்
வந்தால் மாறுமே!
ஆண் : நோ! நோ! நோ!


ஆண் :காற்றினில் ஆடிடும் கொடிபோல்!-என்
கையில் ஆட நீ வா!
பெண் : கையினில் ஆடணும் என்றால்!-ஒன்றை
கழுத்தில் போடணும்!