பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

129


ஆண் : சிரிக்கத் தெரிந்தால் போதும்-துயர்
நெருங்காது நம்மை ஒரு போதும்!  (சிரி)
பெண் : சிரிக்கத் தெரிந்தால் போதும்-துயர்
நெருங்காது நம்மை ஒரு போதும்!  (சிரி)
ஆண் : வனத்துக்கு அழகு
பெண் : பசுமை
ஆண் : வார்த்தைக்கு அழகு
பெண் : இனிமை
ஆண் : குளத்துக்கு அழகு
பெண் : தாமரை-நம்முகத்துக்கு அழகு புன்னகை(சிரி)
ஆண் : இரவும் பகலும் உண்டு-வாழ்வில்
இளமையும் முதுமையும் உண்டு!
பெண் : உறவும் பகையும் உண்டு-எனும்
உண்மையை நெஞ்சில் கொண்டு  (சிரி)
பெண் : உறவை வளர்ப்பது.
ஆண் : அன்பு
பெண் : மன நிறைவைத் தருவது
ஆண் : பண்பு