பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132


ஆண் : யாருக்கு யார் சொந்தமென்பது-என்னை
நேருக்கு நேர் கேட்டால் நானென்ன சொல்வது?
வாரி முடித்த குழல் எனக்கே தான் சொந்த மென்று
வானத்துக் கார் முகிலும் சொல்லுதே?
மலர்ந்து விளங்கும் முகம் எங்களின் இனமென்று
வண்ண மலரெல்லாமே துள்ளுதே-இதில்
(யாருக்கு)


பெண் : வண்ண மலர் என்றும் வண்டுக்குத் தான் சொந்தம்!
வழங்கிடும் மதுவாலே இரண்டுக்கும் ஆனந்தம்!
ஆண் : தந்தப்பல் எழில் கண்டு, தன் இனந்தான் என்று
பொங்கும் வெண்முத்து பண்பாடுதே!
குங்கும இதழ் கண்டு கோவைக் கனி எல்லாம்
தங்களின் இனமென்று ஆடுதே-இதில்
(யாருக்கு)


பெண் : கொத்தும் கிளிக்கே தான் கோவைக்கனி சொந்தம்!
குறிப்பாக உணர்த்தலாம் வேறென்ன சொல்வது?
(யாருக்கு)
சபாஷ் மாப்பிள்ளை-1961
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P சுசிலா