பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

133


வஸந்தன் : வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து
வாடாமல் இருக்கும் பூ என்ன பூ?
மீனா : அன்புக் கணவனின் முன்னாலே மனைவி
அழகாகச் சிந்தும் புன் சிரிப்பு!
வஸந் : நெஞ்சம் ஒன்றாகி எந்நாளும் இன்பம் பெறவே
சொந்தம் கொண்டாடச் செய்யும் புதுப்பூ என்ன பூ?
மீனா : உண்டான ஆசை தன்னைச் சொல்லாமல் சொல்லி
உள்ளம் ரெண்டைச் சேர்க்கும் நாலு கண்ணின் சந்திப்பு!
(வண்டு)


வஸந் : உள்ளம் ஒன்றான பின்னாலே உருவெடுத்து
தொல்லை தந்தாலும் இன்பம் தரும் பூ என்ன பூ?
மீனா : எல்லோரும் இணையேதும் இல்லாத செல்வம்
என்றே சொல்லும் பிள்ளைச் செல்வம் செய்யும் குறும்பு
(வண்டு)


எங்கள் குலதேவி-1959
இசை : K. V. மகாதேவன்