இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
139
- ஆண் : செந்தமிழ் நாட்டுச் சோலையிலே-சிந்து
- பாடித்திரியும் பூங்குயிலே!
- தென்றலடிக்குது என்னை மயக்குது!
- தேன் மொழியே இந்த வேளையிலே!
- பெண் : சிந்தை கவர்ந்த ஆணழகா!
- உம்மால் எனது வாழ்விலே
- சொந்தம் மிகுந்தது! காதலில் புது
- சுகமும் என் மனம் காணுது! (தென்ற)
- ஆண் : அன்பில் விளைந்த அமுதே-என்
- ஆசைக் கனவும் நீயே!
- இன்ப நிலவே! உனது கண்கள்
- இனிய கதைகள் சொல்லுதே! (தென்ற)
- பெண் : உம்மை யன்றி இங்கு இன்பமில்லை!
- உற்ற துணை வேறு யாரு மில்லை!
- என்னுயிரே! தமிழ்க்காவியமே!
- என்றும் ஒன்றாகவே-வாழ்ந்திடுவோம்! (தென்ற)
- ஆண் : இன்ப துன்பம் எதிலும்-சம
- பங்கு அடைந்தே நாமே
- இல்லறம் ஏற்று பேதமில்லா
- எண்ணங் கொண்டு வாழலாம்: (தென்ற)