பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

139


ஆண் : செந்தமிழ் நாட்டுச் சோலையிலே-சிந்து
பாடித்திரியும் பூங்குயிலே!
தென்றலடிக்குது என்னை மயக்குது!
தேன் மொழியே இந்த வேளையிலே!
பெண் : சிந்தை கவர்ந்த ஆணழகா!
உம்மால் எனது வாழ்விலே
சொந்தம் மிகுந்தது! காதலில் புது
சுகமும் என் மனம் காணுது!  (தென்ற)


ஆண் : அன்பில் விளைந்த அமுதே-என்
ஆசைக் கனவும் நீயே!
இன்ப நிலவே! உனது கண்கள்
இனிய கதைகள் சொல்லுதே! (தென்ற)


பெண் : உம்மை யன்றி இங்கு இன்பமில்லை!
உற்ற துணை வேறு யாரு மில்லை!
என்னுயிரே! தமிழ்க்காவியமே!
என்றும் ஒன்றாகவே-வாழ்ந்திடுவோம்! (தென்ற)


ஆண் : இன்ப துன்பம் எதிலும்-சம
பங்கு அடைந்தே நாமே
இல்லறம் ஏற்று பேதமில்லா
எண்ணங் கொண்டு வாழலாம்: (தென்ற)