இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
158
- பெண்: பொங்கிவரும் காவிரியே எங்களது தாயே!
- கங்கையினும் மேலான கன்னித்தெய்வம் நீயே!
- ஆண் : மங்கையரின் முகத்தழகு மஞ்சள் பூச்சினாலே!
- மாநிலத்தின் அழகுனது வண்டல் பாய்ச்சலாலே!
- பெண்: அங்கமெல்லாம் அலைபுரள அசைந்து வரும் பாவை !
- செங்கரும்பு பயிர்வளரச் செய்வதும் உன்சேவை!
- ஆண் : மாலையிட்ட மங்கையர்கள் தாலி பெருக்கிப் படைப்பார்!
- மணவாளன் கைபிடித்து சிரித்தபடி நடப்பார்!
- பெண்: வாளையைப்போல் காளையர்கள் தாவித் தாவிக் குதிப்பார்!
- மனங் கவரும் கன்னியர்மேல் நீரை வாரி இறைப்பார்!
- பெண்: மலை முடியில் பிறந்ததனால் மலைமகளும் நீயே!
- அலைகடலில் கலந்ததனால் அலைமகளும் நீயே!
- ஆண் : சலசலக்கும் ஒசையிலே ஏழுசுரம் தந்தாயே!
- பெண்: தமிழ் முழக்கம் செய்வதனால் கலைமகளும் நீயே!
பொன்னித்திருநாள்-1960
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P. சுசிலா