பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

159


வெற்றி கொள்ளும் வாளேந்தி சுற்றும் வீரர் இருகையைப்
பற்றிக் கொண்டேன் என் கையிலே-இனி
வேறென்ன தேவை வாழ்விலே!-இந்த
ஜெகமே என்கையிலே!


தாவென்று கேட்குமுன் "இந்தா" வென்றே அள்ளி
ஒய்வின்றி தரும் "கை" என் கையிலே!-இனி
சீருண்டு பேருண்டு வாழ்விலே!-இந்த
ஜெகமே என் கையிலே!


கனவாகவே துன்பக் கதையாகவே-சென்ற
காலத்தின் நினைவும் எனக்கில்லையே!- என்
கண்முன்னே நான் காணும் வாழ்விலே!-இந்த
ஜெகமே என் கையிலே!


எந்நாளும் என்னைக் கண்போலவே காக்கும்
பண்பாளர் துணையும் உண்டானதே!-இனி
தன்மானப் பெருவீரர் அன்பிலே-இந்த
ஜெகமே என் கையிலே!
பாக்தாத் திருடன்-1960'
இசை : கோவிந்தராஜலு நாயுடு
பாடியவர் : P. சுசிலா