இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
159
- வெற்றி கொள்ளும் வாளேந்தி சுற்றும் வீரர் இருகையைப்
- பற்றிக் கொண்டேன் என் கையிலே-இனி
- வேறென்ன தேவை வாழ்விலே!-இந்த
- ஜெகமே என்கையிலே!
- தாவென்று கேட்குமுன் "இந்தா" வென்றே அள்ளி
- ஒய்வின்றி தரும் "கை" என் கையிலே!-இனி
- சீருண்டு பேருண்டு வாழ்விலே!-இந்த
- ஜெகமே என் கையிலே!
- கனவாகவே துன்பக் கதையாகவே-சென்ற
- காலத்தின் நினைவும் எனக்கில்லையே!- என்
- கண்முன்னே நான் காணும் வாழ்விலே!-இந்த
- ஜெகமே என் கையிலே!
- எந்நாளும் என்னைக் கண்போலவே காக்கும்
- பண்பாளர் துணையும் உண்டானதே!-இனி
- தன்மானப் பெருவீரர் அன்பிலே-இந்த
- ஜெகமே என் கையிலே!
பாக்தாத் திருடன்-1960'
- இசை : கோவிந்தராஜலு நாயுடு
- பாடியவர் : P. சுசிலா