பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168


வசந்தா : மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய்விடு!
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய்விடு!
மீனா : மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய்விடு!
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய்விடு!
வசந்தா : விதைப்ப தெல்லாம் முளைப்பதில்லை மண்ணின் மீதிலே!
முளைப்ப தெல்லாம் விளைவதில்லை இந்த உலகிலே!
மீனா : மலர்வ தெல்லாம் மணப்பதில்லை பூமி தன்னிலே!
வளர்ந்த அன்பு நிலைப்பதில்லை பலரின் வாழ்விலே!
ஒரு நிலாதான் உலவ முடியும் நீலவானிலே
உணர்ந்த பின்னால் கலங்கலாமோ உள்ளம் வீணிலே!
வசந்தா : உருகி உருகிக் கரைவதாலே பலனுமில்லையே!
ஓடிப்போன காலம் மீண்டும் வருவதில்லையே!