பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170


பட்டுச் சிறகடித்தே-பறக்கும்
சிட்டுக் குருவிகளா!--சிறைப்
பட்டுத் தவித்துருகும் பாவை என்
பரிதாபம் காணீர்களா?
தட்டிப் பறித்து வந்தே!-என்னை
சஞ்சலக் கூட்டுக்குள்ளே!-ஒரு
துஷ்டன் அடைத்துவிட்டான்!-பெரும்
துன்பத்தில் ஆழ்த்தி விட்டான்!- இதை
விட்டுப் பறப்பதற்கோ-எனக்கு
இறகுகள் ஏதுமில்லை!-என்னைத்
தொட்டுக் கலந்தவர்க்கே- இதைப்போய்ச்
சொல்லிட மாட்டீர்களா?
முத்துமுத்தாய்க் கண்ணீர்த்-துளியை
முகத்தினில் சோரவிட்டே-இங்கு
எத்தனை நாள் இன்னும்-நான்
இவ்விதம் வாடுவதோ?-மனம்