இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
170
- பட்டுச் சிறகடித்தே-பறக்கும்
- சிட்டுக் குருவிகளா!--சிறைப்
- பட்டுத் தவித்துருகும் பாவை என்
- பரிதாபம் காணீர்களா?
- தட்டிப் பறித்து வந்தே!-என்னை
- சஞ்சலக் கூட்டுக்குள்ளே!-ஒரு
- துஷ்டன் அடைத்துவிட்டான்!-பெரும்
- துன்பத்தில் ஆழ்த்தி விட்டான்!- இதை
- விட்டுப் பறப்பதற்கோ-எனக்கு
- இறகுகள் ஏதுமில்லை!-என்னைத்
- தொட்டுக் கலந்தவர்க்கே- இதைப்போய்ச்
- சொல்லிட மாட்டீர்களா?
- முத்துமுத்தாய்க் கண்ணீர்த்-துளியை
- முகத்தினில் சோரவிட்டே-இங்கு
- எத்தனை நாள் இன்னும்-நான்
- இவ்விதம் வாடுவதோ?-மனம்