இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
191
- இன்னொருவர் தயவெதற்கு?
- இந் நாட்டில் வாழ்வதற்கு!
- இல்லையென்ற குறையும் இங்கே
- இனிமேலும் ஏன் நமக்கு?
- கன்னித்தாய் காவேரி எந்நாளும் துணையிருக்க!
- கைகளிலே உழைப்பதற்கு பலமிருக்க திறமிருக்க!
- பொன்விளையும் பூமியெனும் கண்ணான நிலமிருக்க!
- புகழுடனே உலகையாண்ட இனம் என்ற பெயரிருக்க! (இ)
- எண்ணத்தால் இமயம் போலே உயர்ந்து விட்ட மனமிருக்க!
- லட்சியமே உயிராகக் கொண்டாடும் குணமிருக்க!
- முன்னேற்றப் பாதையிலே அறிவோடு நாம் நடக்க!
- கண்ணோட்டம் கொண்டவர்கள் வழிகாட்டக் காத்திருக்க! (இ)
- வந்தாரை வரவேற்று வாழவைத்த தென்னாடு!
- வள்ளுவனார் பொது மறையை வழங்கிய நம்நாடு!
- இந்நாடு பிறர்கையை எதிர்பார்த்து வாழுவதா?
- எந்நாளும் துயர்மேகம் நம்மீது சூழுவதா?
தங்கரத்தினம்-1960
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர் : P சுசிலா