இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
195
- பட்டு : கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்!
- வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்!
- நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும் !
- நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்!
- உண்மையிதை உணர்ந்து நன்மைபெறப் படித்து
- உலகில் பெரும் புகழ் சேர்த்திடடா!
- குமரன் : பள்ளிக்குச் சென்று கல்வி பயின்று
- பலரும் போற்றப் புகழ் பெறுவேன்!
- பட்டு : சபாஷ்!
- அக்கம் பக்கமே பாராது!
- ஆட்டம் போடவும் கூடாது!
- அழுவதும் தவறு! அஞ்சுவதும் தவறு!
- எது வந்த போதிலும் எதிர்த்து நில்லு!
- குமரன் : அஞ்சா நெஞ்சம் கொண்டு வாழ்வேன்!
- இந்த நாட்டின் வீரனாவேன்!
- பட்டு : சபாஷ்!
- தன்னந்தனிமையில் நீயிருந்தால்
- துன்பப் புயலுமே உனைச் சூழ்ந்தால்
- கண்கலங்குவாயா? துணிந்து நிற்பாயா?
- கண்மணி எனக்கதை சொல்லிடு நீ!