பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198


இருவரும்: துணையின்றி வெண்புறா தனியாக வந்ததே!
வன வேடன் வீசிய வலை தன்னில் வீழ்ந்ததே!
ஆண் : இனம் யாவும் சேர்ந்து தான் அதை மீட்டுச் சென்றதே
கதையான போதிலும் கருத்துள்ள பாடமே!
இருவரும்: வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே!
கோரஸ்: ஒற்றுமையாய்...!
இனத்தாலே, ஒன்று நாம்!
மொழியாலும் ஒன்றுதான்!
இணையில்லா தாயகம்
நமக்கெல்லாம் வீடுதான்!
ஒரு தாயின் சேய்கள் நாம்!
இது என்றும் உண்மையே!
அறிவோடு நாமிதை
மறவாமல் எண்ணியே
ஒற்றுமையாய் வாழ்வதாலே
உண்டு நன்மையே!
பாகப்பிரிவினை-1959
இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியவர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் & L. R. ஈஸ்வரி குழுவினர்