பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

205


அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே!-வள்ளுவர்
ஆக்கி நமக்களித்த அரும் பொருளே!
(அறி)
உடலுக்கு உயிர் போலே!
உலகுக்கு ஒளிபோலே!
பயிருக்கு மழை போலே!
பைந்தமிழ் மொழியாலே!
(அறி)
அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே!
அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே!
அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே
அவசியம் கற்றுணர்ந்து பயன் பெறும் நினைப்பாலே!
(அறி)
வாழும் வழிமுறைக்கு இலக்கணமானது!
மனம்மொழி மெய்இனிக்க வார்த்திட்ட தேனது!
வானகம்போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது!-எம்
மதத்திற்கும் பொதுவென்னும் பாராட்டைக்கண்டது!
அறிவாளி-1963
இசை : S.V. வெங்கட்ராமன்
பாடியவர் : T. M. செளந்தரராஜன்