இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
205
- அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே!-வள்ளுவர்
- ஆக்கி நமக்களித்த அரும் பொருளே!
- (அறி)
- உடலுக்கு உயிர் போலே!
- உலகுக்கு ஒளிபோலே!
- பயிருக்கு மழை போலே!
- பைந்தமிழ் மொழியாலே!
- (அறி)
- அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே!
- அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே!
- அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே
- அவசியம் கற்றுணர்ந்து பயன் பெறும் நினைப்பாலே!
- (அறி)
- வாழும் வழிமுறைக்கு இலக்கணமானது!
- மனம்மொழி மெய்இனிக்க வார்த்திட்ட தேனது!
- வானகம்போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது!-எம்
- மதத்திற்கும் பொதுவென்னும் பாராட்டைக்கண்டது!
அறிவாளி-1963
- இசை : S.V. வெங்கட்ராமன்
- பாடியவர் : T. M. செளந்தரராஜன்