பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212


எளியோர்க்கு சுகவாழ்வு ஏது?-துன்ப
இருள் நீக்க ஆள்வோர் எண்ணாத போது!(எளி)


திருநாடு தன்னில் திருவோடு ஏந்தி
தெருவோடு போகும் நிலைமாறிடாது!
சீமான்கள் உள்ளம் மாறாத போது!(எளி)


எதுவந்தபோதும் விதிஎன்று எண்ணும்
மதிகொண்ட மாந்தர் மனம் மாறிடாது
நிதியோடு இன்பநிலை நேர்ந்திடாது !(எளி)


கனவு-1954
இசை: S. தட்சிணாமூர்த்தி