பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220


வாழ்வு உயரவேண்டும்!-நாட்டின்
வளமும் பெருகவேண்டும்!
ஏழை எளியவர்க்கே!-உதவும்
எண்ணம் பரவ வேண்டும்!


பேத மகல வேண்டும்-மத
பித்தம் நீங்க வேண்டும்-பொல்லா
சூதும் வாதும் தொலைந்தே-தூய
ஜோதி துலங்க வேண்டும்!


மாதர் தம்மை யடிமை-செய்யும்
வழக்கம் ஒழிய வேண்டும்!
நீதி நிலவவேண்டும்!-எங்கும்
நேர்மை உலவ வேண்டும்!-இன்ப
(வாழ்வு)


ராஜாம்பாள்-1951
இசை: ஞானமணி