இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
223
- திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்!
- திருமாங்கல்யம் பெண்களுக்கு ஜீவாதாரம்!
- (திரு)
- திருவிழா ஊருக் கெல்லாம் சிங்காரம்-நம்
- திருநாட்டின் பெருமைக்கு இதுவேதான் ஆதாரம்!
- (திரு)
- "இல்லறமே நல்லறமாய் வாழுங்க"-என்ற
- வள்ளுவரை வாசுகியைப் பாருங்க!
- தெள்ளமுதாம் நீதிமொழி தன்னையே-நமக்கு
- அள்ளித் தந்த பாட்டி இந்த ஒளவையே!
- (திரு)
- சதிபதிகள் இணைந்தது சம்சாரமே!-அதில்
- தனிமை வந்தால் இன்பநிலை மாறுமே!-எனும்
- தத்துவத்தைச் சொன்ன வேதநாயகன்!-சொல்லின்
- நித்தியத்தை உணரவேணும் யாருமே!
- (திரு)
மனமுள்ள மறுதாரம்-1958
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர்: P. சுசிலா