பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226


சமாதானமே தேவை ...
அந்த சன்மார்க்கம் தழைத்திடச் செய்வோம் சேவை
அமைதியாக நாம் வாழ்ந்திடவே
அன்பும் அறமும் வளர்ந்திடவே
சமரசப் பாதை தோன்றிடவே
சாந்தியும் இன்பமும் சூழ்ந்திடவே
(சமாதான)


போட்டிப் பொறாமைகள் இல்லாத-ஒரு
புதிய சமுதாயம் உருவாக-புத்தர்
காட்டிய வழியில் நாம் போக-அவர்
கண்ட கனவுகள் நனவாக
(சமாதான)


கட்சி பேதங்கள் எதற்காக?-பல
கலகமும் பகையும் எதற்காக?
ஒற்றுமையால் நாம் உயர்ந்திடுவோம்!
ஒரே கட்சியாய் இருந்திடுவோம்!
(சமாதான)
மருத நாட்டு வீரன்-1961
இசை : S. V. வெங்கட்ராமன்
பாடியவர்: T. M. செளந்தரராஜன்