பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

227


பாட்டு
வணக்கம் வணக்கம் ஐயா, அம்மா உங்க அபயம்!
அணைக்கும் கையால் தள்ளாதீங்க இந்தச் சமயம்!
(வண)
வாயிருக்கு எங்களுக்கும் வயிறிருக்கு!
வாட்டுகின்ற பசிப்பிணி துயரிருக்கு!
வாழுவது உங்க கையில் தானிருக்கு!
(வண)
பற்றிப் படர வந்த பசுங்கொடியைப்
பந்தலே தள்ளுவதும் சரியா?
பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகள் குறைகளைப்
பெரிதாய்க் கொள்ளுவதும் முறையா?
(வண)
(கெஜல்)
அண்ட நிழல் தேடிவரும் நொண்டிகளை ஆலமரம்
அடித்தே விரட்டுவதும் உண்டோ?
வந்தவரை வாழ வைக்கும் வசதி படைத்தவங்க
தண்டனைகள் தருவதும் நன்றோ?
பாட்டு
கண்ணிருக்கு உங்களுக்குக் கருத்திருக்கு!
கையேந்தும் எங்கநிலை தெரிஞ்சிருக்கு!
கடவுளும் நீங்க தான் எங்களுக்கு!
(வண)
மாடப்புறா-1962
இசை : K. V. மகாதேவன்
பாடியவர் : P. சுசிலா