பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242


(தொகையறா)
என் அங்க நிறத்திற்குத் தங்கமும் ஈடாமோ?
பொங்கும் விழிப்பார்வைக்குப் புதுவைரம் இணையாமோ?
குங்கும இதழுக்குச் செம்பவழம் நிகராமோ?
கோடானுகோடி பொருள் ஒரு கொஞ்சு மொழி சுவைதருமோ?
(பாட்டு)
செங்கரும்புச் சாறெடுத்து தேனுடனே அதைச் சேர்த்து
சிங்கார ரசமளிப்போம் தேடியாரும் வரும் போது!
திகட்டாத இனிமை தந்து வாழ்விலே!
(இருப்பவர்கள்)
நாலு வேலி நிலம்-1959
இசை : K.V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா