பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244


கண்ணைப் போல தன்னைக் காக்கும்
அன்னை தந்தையே-உணர்ந்து
சொன்ன சொல்லைப் போற்ற வேணும்:
தூய சிந்தையே-இதுவே அறிவுடமை!
ஒரு கன்னியின் கடமை! -
முன்னும் பின்னும் எண்ணிப் பார்த்து
நடந்திட வேண்டும்!
கண்ணை, காதை வாயை அடக்கும்
தன்மையும் வேண்டும்!
பொன்னில், பொருளில் ஆசையின்றி
இருந்திட வேண்டும்!
போது மென்ற மனதுடனே!
மகிழ்ந்திட வேண்டும்
இதுவே அறிவுடமை!
ஒரு கன்னியின் கடமை!
அடங்கி ஒடுங்கி அன்பு காட்டும்
பண்பில்லாது-பூணும்
அணி மணியால் வந்து சேரும்
அழகு நில்லாது!
தொடர்ந்து துன்பம் வந்த போது
துணிவுயில்லாது-தங்கள்