இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
244
- கண்ணைப் போல தன்னைக் காக்கும்
- அன்னை தந்தையே-உணர்ந்து
- சொன்ன சொல்லைப் போற்ற வேணும்:
- தூய சிந்தையே-இதுவே அறிவுடமை!
- ஒரு கன்னியின் கடமை! -
- முன்னும் பின்னும் எண்ணிப் பார்த்து
- நடந்திட வேண்டும்!
- கண்ணை, காதை வாயை அடக்கும்
- தன்மையும் வேண்டும்!
- பொன்னில், பொருளில் ஆசையின்றி
- இருந்திட வேண்டும்!
- போது மென்ற மனதுடனே!
- மகிழ்ந்திட வேண்டும்
- இதுவே அறிவுடமை!
- ஒரு கன்னியின் கடமை!
- அடங்கி ஒடுங்கி அன்பு காட்டும்
- பண்பில்லாது-பூணும்
- அணி மணியால் வந்து சேரும்
- அழகு நில்லாது!
- தொடர்ந்து துன்பம் வந்த போது
- துணிவுயில்லாது-தங்கள்