பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246


வாழ்க நமது நாடு!
வளரும் அன்பினோடு!
சூழ்க என்றும் நல்லறங்கள்
என்று சொல்லிப் பாடு!
வானம் பெய்து நாட்டிலே
வளம் நிறைந்து வீட்டிலே
மாசில்லாத இன்பம் பொங்கி
மக்கள் வாழ்க்கை ஏட்டிலே
தேர்ந்த கல்வி ஞானம்
செல்வம் சேர வேணும்!
தேசமெங்கும் தேனும் பாலும்
பெருகி ஓட வேணும்
(வாழ்க)


சண்டையின்றி யாவரும்
ஒன்று பட்டு வாழுவோம்!
அண்டை நாட்டு மக்கள் தம்மை
அன்பினாலே வெல்லுவோம்!
நெஞ்சில் நேர்மை ஈரம்
அஞ்சிடாத வீரம்!
சொந்தங் கொண்டு வள்ளலாக
வாழவேணும் யாரும்!
(வாழ்க)