பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

249


அழகான பொண்னு நான்!
அதுக் கேத்த கண்ணுதான்
எங்கிட்ட இருப்ப தெல்லாம்
தன்மானம் ஒண்ணு தான்!
(அழகான)
ஈடில்லா காட்டு ரோஜா
இதெ நீங்க பாருங்க!
எவரேனும் பறிக்க வந்தா
குணமே தான் மாறுங்க!
முள்ளே தான் குத்துங்க!
ஓ.......அங்கொண்ணு சிரிக்கிது!
ஆந்தை போல் முழிக்கிது!
ஆட்டத்தை ரசிக்க வில்லை!
ஆளைத்தான் ரசிக்குது!
(அழகான)
இங்கொண்ணு என்னைப் பாத்து
கண் ஜாடை பண்ணுது!
ஏமாளிப் பொண்ணுயின்னு
ஏதேதோ எண்ணுது!
ஏதேதோ எண்ணுது!

மருத-15