பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258


அடிக்கிற கைதான் அணைக்கும்
(வசனம்) ஏய்! பாடுடி!
அடிக்கிற கைதான் அணைக்கும்!
அணைக்கிற கைதான் அடிக்கும்!
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்! -
(வசனம்) ம்! ஆடுடி (அடிக்கிற)
புயலுக்குப்பின்னே அமைதி!
வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி!
இருளுக்குப் பின் வரும் ஜோதி!
இதுதான் இயற்கை நியதி!
(வசனம்) பலே! (அடிக்கிற)
இறைக்கிற ஊற்றே சுரக்கும்-இடி
இடிக்கிற வானம் கொடுக்கும்!
விதைக்கிற விதைதான் முளைக்கும்
இதுதான் இயற்கை நியதி
(வசனம்) சபாஷ்! அஹஹ!
(அடிக்கிற)
வண்ணக்கிளி-1959
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: திருச்சி லோகநாதன்