பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262


மாடி மனை கோடி பணம்
வாகனம் வீண் ஜம்பம்!
வாழ்வினிலே ஒருவனுக்குத்
தருவதல்ல இன்பம்!
மழலைமொழி வாயமுதம்
வழங்கும் பிள்ளைச் செல்வம்!-உன்
மார்மீது உதைப்பதிலே
கிடைப்பதுதான் இன்பம்!


மனமுள்ள மறுதாரம்-1958
இசை : K. V. மகாதேவன் -
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்